புதன், டிசம்பர் 09, 2009

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!

3
பள்ளிக்காலம் முதல் இன்று வரை பல நண்பர்கள். வந்துசென்றவ‌ர் சிலர்; நின்று நிலைத்தவர் சிலர்...ஆனால் யாரும் நண்பராக இருந்து எதிரியாக ஆனதில்லை, இவர் ஒருவரைத்தவிர!
அப்போதெல்லாம் இவர் வந்துவிட்டால் போதும் பள்ளியாவது, பாடமாவது....வீட்டீல்  ஒரே ஆட்டந்தான்..இப்போதோ இவர் வரும்போதே எப்படா ஒழிவார் என்றாகிவிட்டது. அவ்வளவு கடுப்பு இவர்மீது.
யாருக்கு இவ்வளவு 'பில்ட்-அப்'? 
வேற யாரு,  விடாக்கண்டன் 'Mr மழை' தான்!


அடைமழை அலுவலக பயணத்திற்கு அடிக்கடி ஆப்பு வைப்பதே இதற்கு மூல காரணமாக இருந்தபோதும் மழையின் அழகு கொழும்பில் துளியும் தெரிவதில்லை என்பதும் ஒரு காரணம். மாறாக மூடப்பட்ட வீதிகளையும், அடுக்கப்பட்ட பேருந்துகளையும், பாஸ்போர்ட் சைஸ் மனிதர்களையுந்தான் பார்க்கமுடிகிறது. ஆனால் ஒன்று, கொழும்பில் சந்து பொந்து வீதிகளை தெரிந்துக்கொள்ள வேண்டுமா? அடை மழையில் ஏறிக் குந்துங்கள் ஒரு பேருந்தில்! அதுவும் கோட்டை-‍ வத்தள மாதிரி பேருந்தென்றால் சொல்லவே வேண்டாம், இலவச சந்து, பொந்து சுற்றுலாவே நடத்துவார்க‌ள். ஆனால் என்ன, நீங்க போக‌வேண்டிய இடத்துக்கு தமிழ் சினிமா போலிஸ் மாதிரி தான் போக வேண்டியிருக்கும் (அதாங்க எல்லாம் முடிஞ்சதும் போய் சேருவாங்களே அவங்களே தான்).


அன்றும் அப்படித்தான். அலுவலக பயணம், அடை மழை....பேருந்து ஏதோ ஒரு குறுக்கு சந்தில் நுழைந்துக் கொண்டிருந்தது . இன்னைக்கும் த. சி. போலிஸ்தான்னு (நானாவது பரவாயில்லை பக்கத்தில் இருந்தவர் வாய்விட்டு புலம்பவே ஆரம்பித்திருந்தார்) செல்பேசி ரேடியோவை (அந்த ரணகளத்திளயும் ஒரு கிளுகிளுப்பு) காதில் மாட்டினேன்.

'நீங்கள் இணைந்திருப்பது வெற்றியின் விடியலோடு...'

வேறு யார், நம்ம லோஷன் அண்ணா தான்.
அன்றைய தலைப்பு என்னன்னு பார்த்தால்... ம்ஹும்,  கேட்டால்

     'மழையைப் பற்றி ஒரு வரி!'

என்ன கொடும சார் இது, கண்லதான் மழைன்னா, காதுலயுமா? சரி, நம்மளும் யோசிப்பம் என்று (உக்காந்து) யோசித்ததில் ஒரு வரியல்ல, நிறையவே தோன்றியது. கூடவே இப்படி ஒரு பதிவிற்கான யோசனையும் கிடைத்தது. எனவே இந்த பதிவிற்கு வழி கோலிய மழைக்கும், லோஷன் அண்ணாவிற்கும் நன்றிகள்.

இதோ மழைத்துளிகள் இல்லையில்லை மழை வரிகள்.

 மழை - தலைநகர வீதிகளின் தலைவலி‍. 
(அப்போது இருந்த நிலைமையில் முதலில் தோன்றியது இதுதான்)


மழை - குடைகளின் அலுவலகம்


மழை - கிரிக்கெட்டின் துயரம் .


ஜொள்ளுக்காக ஒரு வரி
 மழை - கவர்ச்சி நாயகிகளின் 'COMMON COSTUME'


லொல்லுக்காக ஒரு வரி
மழை - ஜெயம் ரவி, ஸ்ரேயா மற்றும் பலர்.
(அட, மழை திரைப்படம் பற்றி சொன்னேங்க.)



கடைசியாக.....

மழை
நனையும்போது குதூகலமாகத்தானிருந்தது‍ - அகதி முகாம்களின் நிலை நினைவிற்கு வரும் வரை!







Related Posts with Thumbnails
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner