சனி, மே 22, 2010

கா(தல்) முதல் க(ண்ணீர்) வரை...!

5
உன் புன்னகை, உன் சிணுங்கல், உன் கோபம், உன் அமைதி, உன் விருப்பம், உன் வெறுப்பு, உன் காதோரத்து பரு, உன் உதட்டோரத்து மச்சம்........ அத்தனையும் எனக்கு அத்துப்படி. ஆனால் இன்னும் நம்பிக்கையில்லை என‌க்கு - என் முழுப்பெயர் தெரியும் உனக்கென்று!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
உன்னை நான் பார்க்கும்பொழுதுகளில் எல்லாம் உன் மேலாடையை சரி செய்துக்கொள்ளுகின்றாய். அப்படி பார்த்தால் நீ முதலில் ஆடை அணிய வேண்டியது உன் கண்களுக்குத்தான்!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

உன் பெயர் தாங்கிய கடதாசித் துண்டுகள் கூட என் சேமிப்பில் பத்திரமாக. அவற்றின் காதுகளுக்கு கேட்க வாய்ப்பில்லை‍ - உன் வீட்டு குப்பைத்தொட்டியில் கிழிந்து கிடக்கும் என் காதல் கடிதங்களின் கத‌றல்!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
நண்பர்கள் கேட்கின்றார்கள், காதலர் தினத்தன்று காதலி உன்னிடமிருந்து பெற்ற பரிசை. எப்படி காட்டிவிடுவது ‍- சிந்திவிட்ட கண்ணீர்த்துளிகளை!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

ஏமாறத்தான் முடிகின்றது,  ஏமாற்றுகின்றாய் நீ என்று தெரிந்திருந்தும்!
இறுதியாக‌ ஒன்றை மட்டும் உணர்த்திவிடு,
புரிந்துக்கொள்ள மறுக்கின்றாயா, இல்லை புரிந்துக்கொண்டு மறைக்கின்றாயா!

5 Response to கா(தல்) முதல் க(ண்ணீர்) வரை...!

மே 22, 2010 8:10 AM

அற்புதம் நன்றாகயிருக்கிறது

வாழ்த்துக்கள்

மே 22, 2010 12:18 PM

உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.
தொடர்ந்து வருக.

மே 23, 2010 6:08 AM

//புரிந்துக்கொள்ள மறுக்கின்றாயா, இல்லை புரிந்துக்கொண்டு மறைக்கின்றாயா!//

நன்றாக இருக்கிறது

மே 23, 2010 2:50 PM

எனக்கும் எழுதும்போது அந்த வரிகள் மிகவும் பிடித்திருந்தன. நன்றி தர்ஷன் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்!

மே 24, 2010 11:55 AM

yappa enga irukay. kavithai ellam nallathan iruku

ippadiku

DR.T.Selvam

கருத்துரையிடுக

அவசியம் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள், பின்னூட்டங்களாக‌!

Related Posts with Thumbnails
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner