உன் புன்னகை, உன் சிணுங்கல், உன் கோபம், உன் அமைதி, உன் விருப்பம், உன் வெறுப்பு, உன் காதோரத்து பரு, உன் உதட்டோரத்து மச்சம்........ அத்தனையும் எனக்கு அத்துப்படி. ஆனால் இன்னும் நம்பிக்கையில்லை எனக்கு - என் முழுப்பெயர் தெரியும் உனக்கென்று!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
உன்னை நான் பார்க்கும்பொழுதுகளில் எல்லாம் உன் மேலாடையை சரி செய்துக்கொள்ளுகின்றாய். அப்படி பார்த்தால் நீ முதலில் ஆடை அணிய வேண்டியது உன் கண்களுக்குத்தான்!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
உன் பெயர் தாங்கிய கடதாசித் துண்டுகள் கூட என் சேமிப்பில் பத்திரமாக. அவற்றின் காதுகளுக்கு கேட்க வாய்ப்பில்லை - உன் வீட்டு குப்பைத்தொட்டியில் கிழிந்து கிடக்கும் என் காதல் கடிதங்களின் கதறல்!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
நண்பர்கள் கேட்கின்றார்கள், காதலர் தினத்தன்று காதலி உன்னிடமிருந்து பெற்ற பரிசை. எப்படி காட்டிவிடுவது - சிந்திவிட்ட கண்ணீர்த்துளிகளை!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
ஏமாறத்தான் முடிகின்றது, ஏமாற்றுகின்றாய் நீ என்று தெரிந்திருந்தும்!
இறுதியாக ஒன்றை மட்டும் உணர்த்திவிடு,
புரிந்துக்கொள்ள மறுக்கின்றாயா, இல்லை புரிந்துக்கொண்டு மறைக்கின்றாயா!
5 Response to கா(தல்) முதல் க(ண்ணீர்) வரை...!
அற்புதம் நன்றாகயிருக்கிறது
வாழ்த்துக்கள்
உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.
தொடர்ந்து வருக.
//புரிந்துக்கொள்ள மறுக்கின்றாயா, இல்லை புரிந்துக்கொண்டு மறைக்கின்றாயா!//
நன்றாக இருக்கிறது
எனக்கும் எழுதும்போது அந்த வரிகள் மிகவும் பிடித்திருந்தன. நன்றி தர்ஷன் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்!
yappa enga irukay. kavithai ellam nallathan iruku
ippadiku
DR.T.Selvam
கருத்துரையிடுக
அவசியம் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள், பின்னூட்டங்களாக!